Thursday, May 9, 2024
-- Advertisement--

பல உயிர்களை காப்பாற்றிய 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் உயிரிழந்தார்..!!! கண்ணீரால் மரியாதை செய்யும் மக்கள்.

சென்னையில் வியாசர்பாடியில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் திருவேங்கடம் (70) அவர்கள் மாரடைப்பினால் உயிரிழந்தார். முதலில் இவர் 2 ரூபாய்க்கு பார்த்து வந்ததாகவும் அதன் பின் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து உள்ளார் என்று கூறுகின்றனர்.

மெர்சல் படத்தில் விஜய் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராக நடித்திருப்பார் அவருடைய கதாபாத்திரம் இந்த மருத்துவரை நினைவில் வைத்து தான் செய்திருக்கிறார்கள் என்று தற்போது கூறி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக ஏழைகளுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் வெறும் ஐந்து கட்டணம் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்த இவர் ஐந்து ரூபாய் உங்களுக்கு போதுமானதா இந்த காலத்தில் இது சாத்தியமா என்று கேட்டிருக்கிறார்கள் அந்தப் அப்பகுதி மக்கள்.

அதற்கு அவர் அளித்த பதில் மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்ட இந்த நிலையில் இலவச மருத்துவம் முடியுமா என்று கேட்டால் கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்வேன் நாம் பயன்படுத்தும் 90 சதவீத மருந்துகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி தான் செய்யப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை நாம் மேம்படுத்தினால் இலவச மருத்துவம் சாத்தியமாகும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பரிசோதனை முடிவுகள் பத்து முதல் ஐம்பது ரூபாய்க்குள் மக்களுக்கு கொடுக்க வேண்டும் அதை அதனை செய்வதே முதல் கட்டம் என்று கூறியுள்ளார்.

பல நோயாளிகளை இன்று தன் மருத்துவத்தினால் காப்பாற்றிய இவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத்தைப் பணமாக பார்க்காமல் சேவையாக செய்யும் இந்த டாக்டருக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் தங்களது வருத்தத்தினை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய சேவைக்குக் கிடைத்த பரிசு மக்களின் அன்பு. இவர் மக்களிடம் பணம் சம்பாதிக்கவில்லை ஆனால் அவர் சம்பாதித்தது மக்களின் அன்பை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles