Sunday, May 19, 2024
-- Advertisement--

டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா ஆபாச பேச்சுக்கள்..!!! ராணுவ வீரருடன் நடவடிக்கை எடுக்க கோரி DGP அலுவலகம் முன் திரண்ட சமூக ஆர்வலர்கள்.

இணையத்தில் ஆபாச வார்த்தைகள் பேசி வீடியோ பதிவிடும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த சூர்யா சமூக வலைத்தளத்தில் ஆபாச வார்த்தை பேசுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது இந்நிலையில் புகார் கொடுப்பதற்காக டிஜிபி அலுவலகத்திற்கு சென்றனர் அங்கு டிஜிபி அவர்கள் வெளியூர் சென்றுள்ளதால் இணையம் வழியாக புகார் அளிக்க கூறியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து புகார் அளிக்க வந்தவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசியது

நாங்கள் சமூக ஆர்வலர்கள் தான் இணையத்தளத்தை தவறாக பயன்படுத்தும் திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, கருப்பு காத்து சந்தான லக்ஷ்மி போன்ற நபர்களை இணையத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். டிக் டாக் ரவுடி பேபியை கைது செய்து உள்ளதாக தகவல் வந்து உள்ளது. அது போல இணையத்தை தவறாக பயன்படுத்தும் அனைவர் மீதும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் சமூக ஆர்வலர் மற்றும் தமிழ் தலைமுறை பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றும் கவிஞர் சுமித்ரா.

மேலும் பேசிய அவர் கொரோனா காலகட்டம் என்பதனால் பிள்ளைகள் ஆன்லைனில் படிக்கிறார்கள். இணையத்தை தவறாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு திறமைகளை காட்டுவதற்காக இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். இணையத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த புகாரை அளிக்க காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரர் காளிராஜ் என்பவர் வந்து இருந்தார். அவர் கூறியது இணையத்தை தவறான வழியில் பயன்படுத்த கூடாது அதனால் தான் நான் ஒரு சமூக ஆவலராய் வந்தேன் ராணுவ உடையுடன் வரலாம் என்று நினைத்தேன் அது வேணாம் என்று தற்பொழுது வந்துளேன் என்று தெரிவித்து உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles