பண்டிகை காலம் என்றாலே மக்கள் கூட்டம் அலைமோதும் அதுவும் தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும். தீபாவளி ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. கொரோனவை மறந்து மக்கள் கூட்ட கூட்டமாக சென்று தீபாவளி ஷாப்பிங்கை ஆரம்பித்துவிட்டார்கள்.
சமீபத்தில் சென்னையில் ஒரு பெரிய ஜவுளி கடை ஒன்றில் மக்கள் அலைமோதிய காட்சி இணையத்தில் வைரல் ஆனது. அந்தக் கடை அரசின் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுக்காததால் சீல் வைக்கப்பட்டது.
தீபாவளி களைகட்டிய இந்த நேரத்தில் கூட்ட நெரிசலில் பெண்கள் சென்று வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக டிநகரில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு மக்களுக்கு கொடுத்து வருகின்றனர் காவல்துறையினர்.
இன்று பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் எடுத்த முயற்சி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக பெண்கள் இதுபோன்ற கூட்ட நெரிசலில் சென்று வரும் போது நகைகளை எளிதாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளதால் நகைகளை பாதுகாக்க நகைக் கவசம் இலவசமாக வழங்கி வருகின்றனர். நகைக்கவசத்தில் ஜிப் ஒன்றை வைத்து உள்ளார்கள்.
அந்த நகை கவசங்களை பயன்படுத்தி பெண்கள் அணிந்து ஷாப்பிங் செல்லும்போது திருடர்களால் எளிதாக நகையை பறிக்க முடியாது. காவல்துறையினர் எடுத்த இந்த முயற்சிக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது மக்களிடம். மக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.