கொரோனா தாக்கம் உலகெங்கும் பரவி வரும் இந்த சூழலில் இந்தியாவிலும் அதன் தாக்கம் இருந்து வருகின்றது.. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சில நாட்களாக அதன் தாக்கம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. தமிழகத்தில் பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேலான பாதிப்புகள் உள்ளன.
இதனால் சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள பூந்தமல்லியில் துணிக்கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த துணிக்கடையில் சுமார் 100 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவருடன் பணிபுரிந்த 60 ஊழியர்களுக்கு தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 50 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டது மட்டுமில்லாமல் அந்த துணி கடையையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.