பிஜேபி எப்படியாவது தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியை வலுப்படுத்தி வருகிறது. கட்சிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலில் களமிறங்க இருக்கும் பிஜேபி தற்பொழுது மீனவர்களின் வாழ்க்கை நிலையை புரிந்துகொண்டு மீனவர்களுக்கு உதவும் வகையில் 75 சதவீத மானியத்தில் அதி நவீன வயர்லெஸ் கருவிகளை மத்திய அரசு வழங்க இருக்கிறது.
23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்தக் கருவியை 500 ரூபாய்க்கு மீனவர்களுக்கு கொடுக்க உள்ளது மத்திய அரசு. இந்தக் கருவி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் படகு பறிமுதல் போன்றவற்றிலிருந்து மீனவர்களை பாதுகாப்பதற்காக இந்த கருவி பெரிதாக உதவும் என்கிறார்கள்.
மீன் பிடிக்கும் தொழிலில் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளதால் அந்த தொழிலை இன்னும் மேன்மைப்படுத்தும் வகையில் மீனவர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு வரப்போகிறது.
செயற்கைக்கோள் மூலம் GPS பயன்படுத்தி கடலில் மீனவர்கள் பயணிக்க புதிய கருவிகளை அறிமுகப்படுத்த உள்ளார்களாம். ராமநாதபுரம் மீனவர்கள் வைத்த கோரிக்கையின் பேரில் மத்திய அரசு தற்பொழுது 75% மானியத்தில் வயர்லெஸ் கருவிகள் வழங்க உள்ளது மத்திய அரசு.