கேப்டன் விஜயகாந்த் சிங்கம் போன்ற மனிதர் அன்பான மனிதர் என்று இவருடன் நெருங்கி பழகிய அனைவரும் கூறுவார்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார். சிங்கப்பூரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தனது வீட்டில் ஓய்வில் இருக்கும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு திடீர் என்று உடல் நிலை குறைவு என்று நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று உள்ளார் என்றும் செய்திகள் வந்தது.
இந்த செய்தி கேட்டதுமே சமூக வலைத்தளத்தில் விஜயகாந்துக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் வருத்தத்துடன் கேட்க ஆரம்பித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்தது.
இதனை தொடர்ந்து மியாட் மருத்துவமனையின் மருத்துவ நிலை அறிக்கை ஒன்று வெளியானது அதில் தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான திரு.விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா சோதனையில் கொரோனா தொற்று இருப்பது 22 செப்டம்பர் 2020 அன்று உறுதி செய்யப்பட்டுள்ளது தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று அறிவித்திருந்தனர்.
தேமுதிக தலைமை கழகம் வழியாகவும் அறிவிப்பை வெளியிட்டார்கள் அதில் கழகத் தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்துக்கு லீஸான அறிகுறி தென்பட்டதும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என திமுக தலைமை கழகம் அறிவித்தது.