Friday, April 26, 2024
-- Advertisement--

வெளியான நான்கே நாட்களில் பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா.? கொண்டாட்டத்தில் படக்குழுவினர்.

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னின் செல்வன். இப்படத்தில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கனவே வெளியான முதல் பாகம் ரிலீஸ் ஆகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி உள்ளது. அவை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார் போன்ற பல முன்னணி திரையுலகினர் நடித்துள்ளார்.

இதையடுத்து இரண்டம் பாகம் வெளியான நான்கே நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles