தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ளது அந்த வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார் ஒரு மர்ம நபர்.
தமிழக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு என்று கூறியவுடன் வெடிகுண்டு நிபுணர்கள் உடனே விரைந்து சென்று மோப்ப நாயை வைத்து பரிசோதனை செய்து வந்தனர். நீண்ட நேரம் நடந்த சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.ஏற்கனவே இவர் விஜய், அஜித், தனுஷ் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பியவர் என்றும் தெரியவந்தது.
தற்பொழுது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பது வதந்தி என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே அனைவரும் திரும்ப சென்றனர்.