ப்ளூ சட்டை மாறன் பேச்சால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள்.
ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமா ரசிகர்கள் இவருடைய விமர்சனத்தை தான் பெரிதாக எதிர்பார்க்கின்றனர் எந்த ஒரு படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் முதலில் காத்திருப்பது ப்ளூ சட்டை மாறன் அவர்களின் விமர்சனத்திற்காக தான்.
ப்ளூ சட்டை மாறன் அவர்களும் தவறாமல் படங்கள் பார்த்து ரிவ்யூ செய்து வந்தார் ஆனால் படம் சரி இல்லை என்றல் அந்தப் படத்தை எடுத்தவர்கள் நடித்தவர்களை தாக்கிய பேசுவார். ஒரு படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை என்று சொல்லலாம் எதனால் நன்றாக இல்லாமல் போனது என்று விளக்கமும் கொடுக்கலாம் ஆனால் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை கண்டபடி பேசி விமர்சிப்பது பெரிய தவறு அதை ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு சினிமா ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
நேற்று இரவு டுவிட்டரில் உள்ள spaceல் ப்ளூ சட்டை மாறன் கலந்துகண்டார் அப்போது விஜய் ரசிகர் ஒருவர் ப்ளூ சட்டை மாறன் அவர்களிடம் ஏன் படங்களை தரக்குறைவாக விமர்சனம் செய்கிறீர்கள் எதற்காக தளபதி பற்றி மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள் என்று கேட்க அதற்கு ப்ளூ சட்டை மாறன் நான் எந்தப் படத்தின் விமர்சனத்தில் விஜய்யை மரியாதை இல்லாமல் பேசி இருக்கேன். விஜய் சூர்யா போன்றவர்களின் படங்களில் விஜய் படம் தான் ரசிக்கும் படி இருக்கும் நான் என்றாவது சூர்யா படம் நன்றாக இருக்கிறது என்று கூறி உள்ளேனா என்று கேட்டார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் நடிகர் என்பதை தாண்டி மக்களுக்காக என்ன செய்தார் என்று கேட்க விஜய் ரசிகர்கள் திரண்டு கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தனர்.
குறிப்பாக ஒரு ஊனமுற்ற ரசிகர் ஒருவர் எனக்கு விஜய் தான் மறைமுகமாக நிறைய உதவிகளை செய்து வருகிறார் அவர் தான் எனக்கு எல்லாமே என்று என்று சட்டை மாறன் அவர்களிடம் கூறினார். தேர்தலில் விஜய் சூர்யா என்றால் யாருக்கு ஓட்டு போடுவீங்க என்று ப்ளூ சட்டை மாறன் கேட்டதற்கு அனைவரும் விஜய்க்கு என்று கூறினார்கள்.
சூர்யா நிறைய நல்லது செய்து இருக்கிறார் நிறைய பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறார் அவருக்கு ஓட்டு போட மாட்டீங்க ஆனா விஜய்க்கு ஓட்டு போடுவீங்க என்று கூற ரசிகர்கள் டென்ஷன் ஆனார்கள். ப்ளூ சட்டை மாறனின் பேச்சு விஜய் ரசிகர்களை டென்ஷன் ஆக்கியது.
விஜய்யும் நிறைய நல்ல விஷயங்களை சத்தமில்லாமல் செய்து வருகிறார் என்று வாக்குவாதத்தில் இறங்கினர் முற்றி போய் DMK ADMK கட்சி பற்றி பேச தொடங்கினார்கள் ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனும் நேரம் 1 மணிக்கு மேலும் வாக்குவாதம் முற்ற சுதாரித்து கொண்ட ஹோஸ்ட் இந்த டாபிக்கை மாற்றினார்.
ப்ளூ சட்டை மாறன் அவருடைய கருத்தை சொல்வதில் தான் மும்மரக இருந்தார் அது போல விஜயின் அரசியல் பற்றி அவரே எந்த முடிவிற்கும் வராத போது ஏன் விஜய் அரசியலை பற்றி இழுக்க வேண்டும் விஜய் இன்றும் சமூகப்பிரச்சனைக்காக சத்தம் இல்லாமல் குரல் கொடுத்து வருகிறார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மக்களோடு மக்களாக விஜய் கலந்து கொண்டார்.
அனிதா மரணம் குறித்து அப்போது உள்ள ஆளுங்கட்சி எதிர்ப்பு இருந்தாலும் நேரடியாக நேரில் சென்று அனிதாவின் வீட்டிற்கே சென்று ஆறுதல் சொன்னார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி கூறினார் என்று ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி அளித்து வருகிறார்கள்.