பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். கர்நாடகாவில் மாவட்ட எஸ்பி ஆக இருந்த அண்ணாமலை IPS விவசாயம் செய்வதற்காக தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு கரூருக்கு வந்தார்.
ஐபிஎஸ் அதிகாரி நீங்கள் நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வேண்டுகோளை ஏற்று அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் மாநிலத் துணைத்தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் தேர்தல் நேரத்தில் ஈடுபட்டார். பாஜக போல கட்சி வருமா தாமரை கண்டிப்பக மலரும் என்று பேசி வந்தார். அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்சரை தேர்தல் பிரச்சாரத்தின் போது மிரட்டி எச்சரிக்கை கொடுத்து பேசினார். அப்படி பேசியது தவறு என்று சமூக வலைத்தளத்தில் மக்கள் கருத்துக்களை பகிர ஆரம்பித்தார்கள்.
தற்பொழுது தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பெரும் பின்னடைவில் இருக்கிறார். இது அவரது கட்சியினருக்கும் மற்றும் அவருக்கும் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.