பாஜக தலைவர் அண்ணாமலை சில இடங்களுக்கு சென்று நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதிக்குச் சென்று அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரைக் புகைப்படம் எடுத்து இது தான் தமிழக முதல்வர் அவர்களின் தொகுதியா வெட்கக் கேடாக இருக்கிறது என்று சமூக வலைதளங்கள் மூலம் விமர்சனம் தெரிவித்திருந்தார்.
BOATல் பயணம் செய்து கொளத்தூர் தொகுதியில் குறைகளை கேட்டு அறிந்து வந்தார். சென்னையில் மழை நீரால் பல இடங்கள் மலை நீரால் நிரம்பிக் கிடைக்கும் போது அண்ணாமலை அவர்கள் மட்டும் கொளத்தூர் தொகுதியை மட்டும் குறை கூறி வருகிறார் என்று நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர்.
தற்பொழுது அண்ணாமலை அவர்கள் சென்னையில் இளம்பெண்ணை கைநீட்டி மிரட்டல் விடுத்துள்ளார் என்று வீடியோ பரவி வருவதாகவும் அது அனைத்தும் பொய் என்றும் அப்போது என்ன நடந்தது என்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ரூபாய் 200 செலுத்தி அறிவாலயம் குழு சிலர் கலைஞர்களால் வழிநடத்தப்படும் நாடக நிறுவனம் எப்போதும் போல் செயல்படவில்லை என்று அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 1949 ல் தொடங்கப்பட்ட நாடக நிறுவனம் ஒரு அரசியல் கட்சியாக எவ்வாறு செயல்படுகிறது மற்றும் இப்போது ஆட்சியில் எப்படி உள்ளது என்பதை புரிந்து கொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள் என்று வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய கட்சியை நாடக நிறுவனம் என்று அண்ணாமலை கூறியதற்கு பல பேர் விவாதங்களை தொடங்கிவிட்டனர்.