பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடத்தினார்.
போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் திரண்டு அண்ணாமலை அவர்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தனர்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை வாக்குறுதி கொடுக்காமலேயே குறைத்தார்கள் ஆனால் வாக்குறுதி கொடுத்த தமிழக அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்கவில்லை என்று பேசியவர் தமிழக முதல்வர் ஸ்டாலினைப் பற்றி அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்து வந்தார்.
கோட்டையை நோக்கி பாஜகவினர் வருவோம் என்று தெரிந்துகொண்டு முதல்வர் டெல்டா பகுதிக்கு எஸ்கேப் ஆயிட்டார் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
தற்பொழுது இணையத்தில் மற்றொரு போஸ்டர் வைரலாகி வருகிறது அதில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் மக்களின் முதல்வரே வருக வருக என்று அண்ணாமலைக்கு மாலை அணிவித்து தமிழ்நாடு அரசு தலைமை செயலகம் முன்பு நிற்பதுபோல போஸ்டர் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நியாயம் வேண்டாமா மக்களின் முதல்வர் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று தங்களது கருத்தினை அறிவித்து வருகின்றனர்.