பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று பஞ்சாப் சென்று பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். ஹுசைன்வாலா என்ற இடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு ஹெலிகாப்டர் மூலம் பஞ்சப் செல்ல இருந்த மோடி வானிலை சரியில்லாத காரணத்தால் திடீர் கார் பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது பஞ்சாப் நெருங்கும்போது சில விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் மோடி அவர்களின் கார் நிறுத்தப்பட்டது பிரதமருக்கு அவர் தரப்பிலிருந்து பாதுகாப்புகள் இருந்தாலும் ஒரு நாட்டின் பிரதமர் மாநிலங்களுக்கு வரும் போது அந்தந்த மாநில முதல்வர் தான் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் ஆனால் நேற்று பாதுகாப்பு குறைவினால் திரும்பி சென்றுவிட்டார் மோடி.
மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு சட்டப்படி என்னென்ன பாதுகாப்பு தர வேண்டுமோ அப்படி என்ன மரியாதை செய்ய வேண்டும் அவற்றை செய்ய வேண்டிய ஒரு மாநில அரசின் கடமை அதை செய்யத் தவறிய பஞ்சாப் மாநில அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்று பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
மோடி அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று திடீர் பிரார்த்தனையில் இறங்கியுள்ளார்கள் பாஜகவினர். இன்று மாலை மயிலையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மோடி அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று பாஜகவினர் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
அதில் பாஜகவினர் கலந்துகொண்டு மோடி அவர்கள் நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்து கொண்டார்கள் சிலர் கையில் தீபம் ஏந்தி யாகம் வளர்த்து கடவுளை வழிபட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.