Friday, May 3, 2024
-- Advertisement--

ஒரே ஒரு ஒட்டு பெற்று பாஜக உறுப்பினர் படுதோல்வி…!!! மாஸ் ட்ரெண்டிங்கில் “ஒற்றை ஒட்டு பாஜ”

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியானது. அங்கு மொத்தம் 910 வாக்குகள் பதிவாகி இருந்தன. திமுகவை சேர்ந்த அருள் ராஜா 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றார்.

பாஜக மாவட்ட நிர்வாகி கார்த்திக் ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியது நகைச்சுவையாக பேசப்பட்டது. அவர் வாங்கிய அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டது தானா? அல்லது வேறு யாரேனும் போட்டனரா? என்று அந்த பகுதி வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் அவர் வீடு வீடாக சென்று பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போட்டோக்கள் ஒட்டிய துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து வாக்கு கேட்டார். அப்படி இருந்தும் அவர் ஒரு ஓட்டு மட்டும் வாங்கி இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கார்த்திக் அதே ஊராட்சியில் 4வது வார்டு ஏ கே எஸ் நகர் பகுதியில் குடி இருக்கிறார். ஆனால் 9வது வார்டு தேர்தலில் போட்டியிட்டார். இதனால் அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து பேரும் அவருக்கு வாக்களிக்க முடியாமல் போனது.

கார்த்திக் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றது சமூகவலைத்தளங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது. “ஒற்றை போட்டு பாஜ” என சமூக வலைத்தளங்களில் கார்த்திக் குறித்த செய்திகள் வைரலாகி வருகிறது. தேசிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு அக்கட்சி உறுப்பினர்கள் வாக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles