தமிழ்நாட்டில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கலாம் என்று அரசு அறிவித்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது திமுகவினர் மற்றும் முக ஸ்டாலின் அவர்கள் குடும்பத்தோடு மதுக்கடைகளை மூடச்சொல்லி போராட்டம் நடத்தினார்.
அப்பொழுது மதுக்கடையை மூட சொன்னவர் இப்பொழுது தமிழக முதல்வர் ஆன பின் மதுக்கடையை மூடாமல் மதுக்கடையை திறக்க சொல்கிறார் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று குஷ்பு நேற்று சமூகவலைதளத்தில் பதிவிட்டு முதல்வர் ஸ்டாலினை கேள்வி கேட்டு வந்தார்.
இன்று பாஜகவினர் தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தன் பங்கிற்கு குஷ்புவும் கலந்துகொண்டு டாஸ்மார்க் திறக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம் என்று கோஷம் எழுப்பி வந்தார் அப்பொழுது அந்தப் ஆர்ப்பாட்டத்தில் உள்ள ஒருவர் துண்டுச் சீட்டில் தமிழக அரசை கண்டிக்கிறோம் என்ற வாசகத்தை எழுதி அதைப் பார்த்துப் பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பேசுறதே நாலு வரி அதையும் துண்டு சீட்டு பாத்து பேசுறிங்களே என்று கலாய்த்து வருகின்றனர்.
ஏற்கனவே குஷ்பு தரமற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்தவர் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் இறங்கி கோஷமிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.