யூடியூபர் கிஷார் கே சாமி சமீபத்தில் தலைவர்கள் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பற்றி அவதூறான கருத்துக்களை பதிவிட்டதற்கும் பெண் பத்திரிக்கையாளரை தரைகுறைவாக பேசியதற்கும் தற்பொழுது இவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் என்னை முடிந்தால் கைது பண்ணுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டுள்ளார் கிஷோர் கே ஸ்வாமி. அதுவரை பொறுத்து இருந்த தமிழக அரசு இவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது இவர் சமீபத்தில் clubhouse செயலியில் கிஷோர் கே சாமியை கைது செய்யுங்கள் என்று இவரே ஒரு குரூப் உருவாக்கி அதில் தலைவர்களைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார் அதுமட்டுமல்லாமல் என்னை யாராலும் கைது செய்ய முடியாது என்பதுபோல அவர் பேசியதும் திமுக ஐடி விங் கொடுத்த புகாரின் பேரில் கிஷோர் கே சாமி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் திடீர் கைதுக்கு கிளப் ஹவுஸ் உரையாடல் தான் முக்கிய காரணம் என்று கூறிவருகின்றனர்.
தமிழக அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் குறிப்பாக திரு அண்ணாமலை அவர்கள் dmk குடும்பத்தை, அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா?பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு; திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர் என்று கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரம் குறித்து பேசிய அண்ணாமலை அவர்கள் நேற்று டாஸ்மாக் திறக்கக்கூடாது என்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பாஜக தொண்டர்களின் படத்தை dmk தரப்பில் மார்பிங் செய்யப்பட்டு வெளியிட்டு உள்ளார்கள் என்று கூறி அண்ணாமலை சீறி உள்ளார்.