Sunday, May 19, 2024
-- Advertisement--

தாகம் தீர்ந்த காக்கா கதை பானையில் கல்லை போட்டு தண்ணீர் குடித்த பறவை..!! வைரலாகும் வீடியோ..!!

தமிழில் சிறுவர் புத்தகங்களில் மிகவும் பிரபலமான கதை தாகம் தீர்த்த காக்கா.

காக்கா ஒன்று மிகவும் தாகத்தோடு தண்ணீரை எல்லா இடங்களிலும் தேடி கொண்டிருக்கும் . அப்பொழுது ஒரு பானையில் தண்ணீர் மிகவும் அடியில் இருக்கும். அதை எப்படியாவது மேலே கொண்டு வருவதற்காக காகம் பக்கத்தில் உள்ள கற்களில் ஒன்று ஒன்றாக எடுத்து அந்த பானையில் போடும். அதன் பிறகு தண்ணீர் மேலே வரும். அந்த தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்ளும் காக்கா.

இந்த கதை அனைவரும் அறிந்ததே. இதை இதுவரை அனைவரும் பாட புத்தகத்திலும் அனிமேஷன் படங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த கதை தற்பொழுது ஒரு பறவை நிஜமாக்கி உள்ளது.

பறவை ஒன்று பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கும் முயல்கின்றது. சிறு பறவை ஒன்று தண்ணீரை மேல் மட்டத்துக்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles