பிக்பாஸ் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை நிரூபித்து பெரிய பிரபலத்தை அடைவார்கள்.
இந்த நிகழ்ச்சி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகியவற்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 5 இன்று முதல் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது நமது உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான்.
இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகம் உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களால் தான் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக எடுத்துச் செல்ல முடியும் அதனால் மக்களும் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு இன்று செல்லப் போகிறார்கள் என்று பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஐந்து பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற போவதாக தகவல்கள் வந்துள்ளது.
இமான் அண்ணாச்சி இவரைப்பற்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்கு தெரியும் பலரை சிரிக்க வைத்த இமான் அண்ணாச்சி இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்த நிழல்கள் நாயகன் நிழல்கள் ரவி அவர்கள் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு நேரத்தில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இருந்தவர் கௌசல்யா. கௌசல்யா அவர்களும் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆதி கடவுள் அகிலாண்டேஸ்வரி ஆக செம்பருத்தி தொடரில் மிரட்டி வரும் பிரியா ராமன் அவர்கள் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது அனைத்தும் எந்த அளவு உண்மை என்பது பொறுத்து இருந்து மாலை 6 மணிக்கு பார்ப்போம்.