விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று யார் வெளியேற போகிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கு பெற்றன ஒரு சில பிரச்சனைகளால் நமிதா மாரிமுத்து இந்த நிகழ்ச்சியை விட்டு தானாகவே வெளியேறினார் மீதமுள்ள 17 போட்டியாளர்களில் போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நாடியா அவர்கள் வெளியேற்றப்பட்டார்.
தற்பொழுது வெளி வந்த தகவலின் படி அபிஷேக் அவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேற்றபடுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
முதல் ஆளாக நாடியா வெளியேற்றிய பின் மீதமுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து இன்று வரை கண்டெண்ட் கொடுப்பது அபிஷேக் மட்டும் தான்.
கன்டென்ட் கொடுப்பவரையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேற்ற போகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது அது மட்டுமல்லாமல் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார் என்பதினால் அபிஷேக் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.