தமிழில் பிக்பாஸ் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் உலகநாயகன் கமலஹாசன்.
கமலஹாசன் எப்போதும் நியாயமாக நடந்து கொள்ளும் மனிதர் என்று மக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல எண்ணம் வந்ததற்கு காரணமே பிக்பாஸ் தான் என்று சொல்லலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர் ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே சென்று உள்ளனர்.
போன வாரம் ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா இரண்டு நபர்களை வெளியேற்றினார் கமல். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு யார் வெளியே வரப் போகிறார்கள் என்ற குழப்பம் பிக்பாஸ் ரசிகர்களிடம் நிலவியது. ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் யார் குறைந்த வாக்குகளை பெற்று இருக்கிறார்களோ அவர்களை கமலஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்வார்.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது ஆஜித் தான் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் ஒரு சிலர் அர்ச்சனா தான் என்று கூறிவருகிறார்கள்.