பிக்பாஸ் சீசன் 4 இல் 16 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றவர் சம்யுக்தா. இவர் இந்த சீசனில் வருவதற்கு முன்பு பிரபல மாடலாக இருந்தவர். அதன் பிறகு நீண்ட காலமாக காதலித்து வந்த கார்த்திக் என்பவரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மாடலிங் துறையிலிருந்து விலகி குடும்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இவருக்கு என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சினிமா மற்றும் மாடலிங் துறையிலிருந்து விலகி வந்த சம்யுக்தா மீண்டும் சினிமா பயணத்தை தொடர்வதற்காக தற்போது பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த சீசன் ஆரம்பத்தில் சம்யுக்தா என்றால் யார் என்று கேட்கும் அளவிற்கு இவர் இருக்குமிடம் தெரியாமல் 16 போட்டி அவர்களில் ஒருவராக அமைதியாக இருந்து வந்தார் . பாலாஜி, சிவானி, ஆர்ஜித் போன்றோருடன் தனது கூட்டணி வைத்துக்கொண்டார். அப்போது தனது கருத்துகளை வெளிப்படையாக மற்றும் தெளிவாகவும் கூறுவதனால் மக்கள் மனதில் மெதுவாக இடம் பிடித்தார். தற்பொழுது பிக்பாஸ் போட்டியாளர்களில் கடுமையான போட்டியாளராக விளங்குகிறரர் சம்யுக்தா.
ஒரு குழந்தை பிறந்த பிறகும் கூட உடலை சிக்கென வைத்து சக போட்டியாளர்களுக்கு ஃபிட்னஸ் பயிற்சியும் அளித்து வருகிறார். அனைத்து விளையாட்டிலும் போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்று அவரது தனித்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கென ஒரு தனி ஆர்மி ஒன்று தற்போது தொடங்கிவிட்டனர். வெளியே வந்த பிறகு நல்லதொரு எதிர்காலம் சினிமா துறையில் உள்ளது என பேச்சு அடிபட்டுள்ளது.