Friday, May 3, 2024
-- Advertisement--

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் உடையை மோசமாக விமர்சித்த பிரபலம்..!!!அந்த வார்த்தை சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்திச்சி..!!! பிரபலத்தை வருத்து எடுக்கும் கீர்த்தி ரசிகர்கள்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி கதாநாயகிகளில் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது நயன்தாராவிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் என்று கூறலாம். தமிழில் அதிக சம்பளம் பெறும் ஒரே நடிகை நயன்தாரா தான் பல வருடங்களாக சினிமாவில் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாராவிற்கு பிறகு சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் தான் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்கள்.

சமந்தா திருமணத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி உடன் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் இளம் கதாநாயகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் குறிப்பாக இவர் நடித்த மகாநதி என்ற படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் இவரை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். தற்பொழுது ரங் டி என்ற படத்தில் நிதின் என்பவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற கீர்த்தி ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்திக்கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த உடை அவரது உடலை விட்டு நழுவ அதனை அட்ஜஸ்ட் செய்து கொண்டே இருந்தார் கீர்த்தி. .அதன்பின் இது வேலைக்காகாது என்று ஒரு கையை வைத்து பிடித்துக்கொண்டு மறு கையை தனது உதவியாளரை பிடித்துக்கொண்டு தர்ம சங்கடத்திற்கு ஆளான கீர்த்தி ஏன் இந்த உடையை அணிந்தோம் என்கிற அளவிற்கு சிரமப்பட்டு போய்விட்டார். நீண்டநேரம் அவதிப்பட்டு வந்த கீர்த்தி மேடையில் ஏறும் போது கூட அந்த உடை சரிய அதை சரி செய்து கொண்டே இருந்தார்.

அந்த உடையை வடிவமைத்த ஃபேஷன் டிசைனர் மீதுதான் தவறு என்று கீர்த்தி ரசிகர்கள் தெரிவித்து வந்தார்கள். இது வரை கீர்த்தி முகம் சுளிக்கும் படி உடை அணிந்ததே இல்லை. அந்த போல முகம் சுளிக்கும் படி கவர்ச்சி காட்சிகளில் கூட நடித்தது இல்லை என்று கீர்த்திக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில் சினிமா துறையில் பிரபலமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் நிறைய யூடியூப் சேனலில் சினிமாவில் நடந்த சுவாரசியமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டு வருகிறார். அப்போது அவர் தெலுங்கு நிகழ்ச்சிக்கு உள்ளாடை போடாமல் சென்ற நடிகை என்று கீர்த்தி சுரேஷை குறிப்பிட்டதோடு தெலுங்கில் மட்டும் கிளாமர் காட்டுகிறார்கள் தமிழ் ரசிகர்கள் பாவம் அல்லவா என்று கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதன் மீது கடும் கோபத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். என்னதான் பிரபலமாக இருந்தாலும் நீங்கள் ஒரு பெண்ணை அப்படி கூறியது தவறு என்று சமூகவலைதளத்தில் விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

பயில்வான் சார் உங்கள் அனுபவங்கள் மற்றும் திரைத்துறையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை சொல்கிறேன் என்று ஒரு நடிகையை இப்படி பேசலாமா என்று அனைவரும் கேள்வியை முன்வைத்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles