தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டுமே இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டுள்ளது இன்று அதிகாலை கொரோனா தொற்று காரணமாக புகழ்பெற்ற பாடகர் கோமகன் உயிரிழந்தார்.
இந்நிலையில் இயக்குனர் சேரன் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் திரைப்படத்தில் பரத்வாஜ் இசையமக்க வெளிவந்த ஒவ்வொரு பூக்களுமே பாடல் பா விஜய் எழுதியிருந்தார் இந்த பாடலை சித்ரா பாடியிருந்தார் இந்த பாடல் மூலம் தேசிய விருது பெற்றார்.
இந்தப் பாடலை ஆட்டோகிராப் திரைப்படத்தில் சினேகாவுடன் இணைந்து கோமகன் சில வரிகளை உணர்வுபூர்வமாக பாடி இருப்பார் இந்தப் பாடலின் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாடகர் கோமகன் அவர்களுக்கு கலைமாமணி விருதும் அவருக்கு கிடைத்தது.
கோமகன் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உடன் ஆர்கெஸ்ட்ரா வைத்த நடத்தி வந்தார் பார்வையற்ற நலவாரிய சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவர் கடந்த 12 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள ஐசிஎப் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இன்று காலை பாடகர் கோமகன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதிகாலை ஒன்றரை மணி அளவில் உயிரிழந்தார்.
இயக்குனர் சேரன் ஆட்டோகிராஃப் படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு பாடகர் கோமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
கோமகனுக்கு திரையுலகினர் மற்றும் இசைத் துறையினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.