Thursday, May 9, 2024
-- Advertisement--

நேற்று ஒரு நாளில் மட்டும் எத்தனை பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது தெரியுமா..?

இ-பாஸ் முறையை நேற்றிலிருந்து தமிழக அரசு எளிதாக்கி உள்ளது. இது எளிதாக பட்டதைத் தொடர்ந்து நேற்று மற்றும் லட்சக்கணக்கில் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல கண்டிப்பாக இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும். அப்படி செல்லவில்லை என்றால் அவர்கள் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

இந்நிலையில் இ பாஸ் விவகாரம் தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில் தமிழக அரசு இ-பாஸ் கிடைப்பதற்காக எளிதாக ஒரு வழிமுறையை செய்துள்ளது. அது நேற்றிலிருந்து கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். அந்த நிலையில் 95 % சதவீதத்திற்கும் இ-பாஸ் விண்ணப்பித்தவர்களுக்கு கிடைத்துள்ளது. இ-பாஸ் பெற்றுத்தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாகவும் இ-பாஸ் நடைமுறையை நீக்க வேண்டும் என்று மக்கள் தொடர்பு கோரிக்கைகளையும் வைத்திருந்தனர்.

எனவே இ-பாஸ் எளிதாக கிடைக்க எடப்பாடி பழனிசாமி நேற்று ஆகஸ்ட் 17 இ-பாஸ் கிடைக்க எளிய வழிமுறையை பிறப்பித்தார். அதாவது நேற்று ஒரு நாள் மட்டும் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து திருப்பி அனுப்பும் சம்பவங்களும் நேற்று நிகழ்ந்தேறியது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles