Monday, May 20, 2024
-- Advertisement--

பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.!

கொரோனா கிருமித்தொற்றால் கடந்த மார்ச் மதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.

இதில் தமிழக செயலக கோட்டை கொத்தளத்தில் 15 ஆம் தேதி காலை 8.45 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்ற உள்ளார். வழக்கமாக சுதந்திர தின விழாவிற்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்படும்.

கொரோனா கிருமித்தொற்று காரணத்தினால் தமிழக அரசு புதிய விதிமுறைகளை விதித்து உள்ளது. அது என்னவென்றால் சுதந்திர தின விழாவில் ஆசிரியர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் வயதானவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று இனிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்டு 15 அன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதில் கலந்துகொள்ள வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles