அட்லீ பிரமாண்ட இயக்குனர் சங்கரின் சிஷ்யன். இவருடைய படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் . இவரின் படங்கள் வேறு ஒரு படங்களின் சாயலில் இருந்தாலும் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நன்றாக வரவேண்டும் என்று மிகவும் மெனக்கெடும் இயக்குனர். இவருடைய பெரிய ப்ளஸ் எமோஷனல் கதைகளை சரியாக கையாளும் விதம் தான்.
இவருடைய படங்களில் எமோஷன் காட்சி இடம் இதைப் பற்றி இடம் பெற்று விடும். அட்லீ இயக்குனர் ஆவதற்கு முன்பு சில குறும்படங்களை இயக்கி நடித்து வந்தார். அப்போது அவருக்கு சிவகார்த்திகேயனும், ப்ரியாவும் நண்பர்கள் ஆனார்கள். ப்ரியாவின் நட்பு நாளடைவில் காதலாக மாறி இட்லியும் பிரியாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தற்பொழுது பிரியா வீட்டில் ஒரு பெரிய இழப்பு நிகழ்ந்துள்ளது. பிரியாவின் தாத்தா உயிரிழந்துள்ளார். காளிராஜ் தாத்தா மேல் அலாதி பிரியம் கொண்ட பிரியா. உங்கள் இழப்பை வார்த்தையால் சொல்ல முடியாது உங்களுக்காக நிறைய கடவுளிடம் வேண்டி இருக்கிறேன். மிஸ் யூ தாத்தா. உங்கள் குரலை இனி கேட்கமுடியாது. நீங்கள் சொல்லும் அறிவுரைகளை மிஸ் செய்கிறேன். லவ் யூ தாத்தா என்று தனது தாத்தா மீது வைத்துள்ள பாசத்தை இணையத்தில் போஸ்ட் போட்டு கொட்டியுள்ளார்.