ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 5 தடகள நட்சத்திரங்கள் தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் (துப்பாக்கி சுடுதல்) பவானி தேவி (வாள்வச்சு) சத்யன் ஞானசேகரன், சரத் கமல் (டேபிள் டென்னிஸ்) நேத்ரா குமணன் கே.சி கணபதி, வருண் தாக்கர் (பாய்மர படகு) ஆகிய 7 பேர் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில் மேலும் 5 தமிழக வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் தடகள போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதிலும் எளிமையான குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் அதிக உடல் வலிமை தேவைப்படும் தடகளத்தில் சாதித்து வருகின்றனர். வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ் (லால்குடி, திருச்சி) நாகநாதன் பாண்டி (சிங்கபுளியம்பட்டி, ராமநாதபுரம்) இருவரும் ஆடவர் 4×400 தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். தனலட்சுமி சேகர் (குண்டூர், திருச்சி) ரேவதி வீரமணி (சக்கிமங்கலம், மதுரை) சுபா வெங்கடேசன் (திருச்சி) ஆகிய மூவரும் கலப்பு4×400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதில் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மதுரை டு டோக்கியோ மதுரை சக்கிமங்கலம் சேர்ந்த ரேவதி வீரமணி சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். இவரது பாட்டி ஆரம்மாள், காய்கறிகளை விற்று ரேவதியையும் அவரது தங்கை அக்காவையும் வளர்த்து வருகின்றார். ரேகா காவல் துறையில் பணிபுரிகிறார். ஜூலை 4-ஆம் தேதி நடந்த தகுதி சுற்றில்4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இலக்கை 53.55 வினாடிகளில் கடந்து இவர் சாதனை புரிந்துள்ளார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள மையத்தில் இவர் பயிற்சி பெற்று வருகிறார். ஒலிம்பிக் அணியில் தேர்வாகி பங்கேற்பது மகிழ்ச்சி அழைக்கிறது. பல்வேறு தடைகளை கடந்து சாதனை படைத்தது பெருமையாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஒலிம்பிக்கில் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றிகள் பெறுவேன். தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் தந்து என்னை போன்றவர்களை ஊக்குவிக்கிறது. தங்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் போட்டியில் களம் இறங்குவேன் என்றார் ரேவதி.