Thursday, May 2, 2024
-- Advertisement--

பிரபல தயாரிப்பாளர் மகளை காதலிக்கும் அசோக் செல்வன்…!!! விரைவில் நடக்கவிருக்கும் திருமணம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை எடுத்து பீட்சா 2 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, மன்மதலீலை, ஹாஸ்டல்,, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்களிடையே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். கடந்த ஆண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.

கடந்த ஆண்டு மட்டும் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என ஐந்து தமிழ் படங்களில் நடித்திருந்தார். தற்போது அசோக் செல்வன் படு பிசியாக நடித்து வருகிறார். அது குறிப்பாக பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாகும். இதில் இவருடன் இணைந்து சந்தனுவும் நடிக்கிறார். நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதால் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அசோக் செல்வன் காதலிக்கும் பெண் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. அந்தப் பெண் யார் என்று பலரும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles