ஆர்யா தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய். மாதவனை போல பெண்கள் ரசிகர் இவருக்கு அதிகம் உண்டு. ஆர்யா கமர்சியல் படங்கள் செய்து வந்தாலும் திடீரென்று தனது நடிப்பை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
சில வருடங்களுக்கு முன்பு கலர்ஸ் டிவி ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆர்யா தனக்கு பிடித்த ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார்கள்.
15 பெண்களை தேர்வு செய்து அதில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கடைசியில் மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் ஆர்யா. பழகிப் பார்த்து பிடித்த மூன்று பெண்கள் இவர்கள் என்று குறிப்பிட்டு இருந்த ஆர்யா இவர்கள் மூவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க போகிறார் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரசிகர்கள் மற்றும் அந்த பெண்களின் பெற்றோர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் பெரிய டெஸ்ட் ஒன்றை வைத்தார் ஆர்யா. எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும் என்று கூறிவிட்டு மூவரையும் சமாதானம் செய்து எஸ்கேப் ஆனார்.
அதன்பின் சில மாதங்கள் கழித்து ஆர்யா நடிகை சயீஷா சைகல் என்பவரை காதலித்து வந்ததாக செய்திகள் வெளிவந்தது. காதலர் தினத்தன்று சயீஷா அவரும் ஆர்யாவும் காதலிப்பதாக சமூக ஊடகங்கள் வழியாக தெரிவித்திருந்தார்.
ஒருவழியாக சயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆர்யா இருவரும் சேர்ந்து வெளிநாடுகள் சுற்றி வந்தனர். மாலத்தீவுக்கு சென்று ஒன்றாக சுற்றி வந்த ஜோடி ஆர்யா சாயிஷா ஏறி அமர்ந்து புகைப்படங்களை வெளியிட்டார்.
சமீபத்தில் திருமணத்திற்கு முன்பே ஆர்யாவும் சயீஷாவும் நெருக்கமாக இருப்பது போல புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது அதனை பார்த்த ஆர்யாவின் மாமியார் இந்த புகைப்படங்கள் கஜினிகாந்த் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தை பார்த்தால் ஏற்கனவே இருவரும் பழக்கம் உள்ளவர்கள் போன்று இருக்கும் உண்மை என்ன என்றால் ஆர்யாவும் சயீஷாவும் முதல் முதலில் அப்போது தான் சந்தித்து கொண்டார்கள்.
இந்த புகைப்படங்கள் பட்டாயாவில் படப்பிடிப்பின் முதல் நாள் எடுக்கப்பட்ட விளம்பர ஸ்டில்கள் என்று இன்ஸ்டா வாயிலாக விளக்கம் கொடுத்தார் ஆர்யாவின் மாமியார்.