நாகர்கோவிலில் பிறந்து திருச்சியில் செட்டிலாகி தன் கல்லூரிப் படிப்பை சென்னையில் ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டியில் தொடங்கி தற்பொழுது நடிகராக வளர்ந்தவர் தான் நடிகர் ஆரவ்.
ஆரவ்வின் முதல் படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “ஓ காதல் கண்மணி” என்ற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “சைத்தான்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார் ஆரவ். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகபோட்டியாளரான ஓவியாவை ஆரவ்வுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.
ஆரவ் ஓவியா இருவரும் காதலித்து வருகிறார்கள். வெளியிடங்களில் ஒன்றாக சுற்றி திரிகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆரவ் ஓவியாவை தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்விஸ்ட் வைத்தார் ஆரவ்.
இன்று ஆரவ் பெரியவர்கள் சம்மதத்துடன் வீட்டில் பார்த்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணின் பெயர் ராஹேய் இவர் இயக்குனர் கவுதம் மேனன் “ஜோஷுவா இமை போல் காக்க” படத்தின் கதாநாயகி இவர் தான். தற்பொழுது ஆரவ்-ராஹேய் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் ஆரவ்வின் பிக்பாஸ் நண்பர்கள் ஸ்நேஹன், ஹரிஷ் கல்யாண் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை வாழ்த்தும் கூறி அப்போ ஓவியா இல்லையா என்று கலாய்த்து வருகின்றனர்.