டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் உற்சாகப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் நமது நாட்டை சேர்ந்த திறமையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஹிந்துஸ்தானிவே என்ற பாடல் உருவாக்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார். ஒன்றிய அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடலை அனன்யா பாடியுள்ளார். நிர்மிக சிங் சிஷிர் சமந்த் அனன்யா பாடல் எழுதியுளளனர். இந்தியில் உருவான இப்பாடல் “தி இந்தியன் வே” என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.
Excited to share the teaser of our song, Hindustani Way. Join us as we cheer for our champions! #HindustaniWay #Cheer4India @ananya_birla pic.twitter.com/KvC8ljOTwl
— A.R.Rahman #99Songs 😷11th July on Colours TV 🇮🇳 (@arrahman) July 9, 2021