முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் என்றும் மறக்க முடியாத மனிதர் அனைவரும் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்தியா வல்லரசாகும் என்று பெரிய நம்பிக்கை வைத்தவர். நாட்டின் முதுகெலும்பே இளைஞர்கள் தான் என்று அடிக்கடி கூறுபவர். எந்த ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குச் சென்றாலும் மாணவ-மாணவிகளை ஊக்குவித்து அன்போடு சில மணி நேரங்கள் உரையாடி வந்தவர்.
இந்தியாவை வல்லரசாக வேண்டும் என்று நினைத்த ஒரு தலைவர் தற்பொழுது நமக்கு இல்லாதது பெரிய கவலைதான். கலாம் போல தலைவர்களை இழந்துவிட்டோம் என்று இன்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வருத்தம் இருக்கிறது.
அப்துல் கலாமும் நடிகர் கமலஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே விமானத்தில் பயணித்தார் கலாம். இருந்து சென்னை திரும்பிய கொச்சியில் இருந்து பயணித்த அப்துல் கலாமும் கமலஹாசனும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே வந்தார்களாம்.
விமானத்தை விட்டு இறங்கியதும் என்ன பேசிக் கொண்டு வந்தீர்கள் என்று அப்துல் கலாம் அவர்களிடம் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கேட்டிருக்கிறார் அதற்கு அப்துல் கலாம் கமலஹாசனை அரசியலுக்கு வர சொன்னேன் என்று கூறினாராம் கலாம். இதனை மக்கள் நீதி மய்யத்தில் அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் பொன்ராஜ் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.