தற்பொழுது இன்று காலை வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்த நிலையில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி அதற்கு நிவர் எனப் பெயரிடப்பட்டது. இந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை தொடும் அதி தீவிர புயலாக மாறியது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதமாகின. சாலை எங்கிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் இருந்து மீளவே தமிழகத்திற்கு ஓரிரு நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது இன்னொரு வங்க கடலின் தெற்கு மையப்பகுதியில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வரும் 29ஆம் தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என உறுதியாக கூறமுடியாது என்றாலும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் உட்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.