சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அண்ணாத்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து இன்று வரை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் தீவிர ரசிகர்கள் சிலரே படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை அதுமட்டுமல்லாமல் திரைக்கதை சரி இல்லை என்று கூறிவருகிறார்கள் ஆனால் இன்றும் அண்ணாத்த திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது காரணம் ஒரே மனிதர் ரஜினி என்பவருக்காக மட்டும்தான்.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறதே இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனல் ஒன்று அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிவாவிடம் கேட்டதற்கு சிவா அவர்கள் நான் எந்த ஒரு negativtiyம் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்னை சுற்றி positivity ஐ மட்டும் வைத்துக் கொள்வேன். அவ்வளவு இறை பக்தியோடு இருக்கும் எனக்கு என் மீது கால்புணர்ச்சியோ இல்ல வெறுப்போ என்னை பாதிக்கும் என்று நினைக்கிறீங்க ஒரு 1 %கூட கிடையாது.
என்கிட்ட நிறைய அன்பு இருக்கு அதை நான் கொடுத்த கிட்டே இருக்கேன். என் HATERSக்கு நான் பிரார்த்தனை செய்வது என்னவென்றால் அவங்களுக்கும் நல்ல லைப் கிடைக்கணும் எனக்கு கிடைச்ச மாதிரி அவங்களுக்கும் நல்ல லைப் கிடைச்சா NEGATIVITY SPREAD பண்ண மாட்டாங்க என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சிறுத்தை சிவா படத்தோட வெற்றியைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை பேட்டி கொடுப்பதற்கு முன்பு என்னை வாழ்த்தி எத்தனை போன் கால் வந்தது என்பது உங்களுக்கே தெரியும் அது மட்டுமல்லாமல் ரஜினி சார் ஒவ்வொரு தடவையும் படத்தின் ரிலீஸுக்கு பின் பேசும்போது அவருடைய பேச்சில் சந்தோசம் தெரிகிறது. சிவா நம்ம பெருசா ஜெயிச்சிட்டோம் என்று அவர் சிரிப்போடு கூறும் போது அதை தவிர வேற என்ன சார் எனக்கு வேணும் என்று கூறியுள்ளார் சிறுத்தை சிவா.
அது மட்டுமல்லாமல் விரைவில் சூர்யாவுடன் ஒரு படம் பண்ண உள்ளதாகவும் அடுத்து விஜய் அவர்களுடன் ஒரு படம் செய்யவும் மறுபடியும் தல அஜித்துடன் இன்னொரு படம் செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக கூறி உள்ளார்.