அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் என்று திட்டவட்டமாக பாஜக கூட்டத்தில் பேசியுள்ளார் நடிகை வாசுகி. நடிகர் வாசுகி பேசியது 22 வருஷமா அண்ணா திமுகவில் குப்பை கொட்டிட்டு வந்துட்டேன் ஏன்னா பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பாஜக தான்.
எப்போதும் ஸ்டைலா கூலிங் கிளாஸ் மாட்டிக்கிட்டு கவுண்டமணி அவர்களுடன் வருவேன் இப்போ வருங்கால முதல்வர் பக்கத்துல இருக்காங்க அதனால அடக்க ஒடுக்கமாக வந்து இருக்கேன். திமுகவிற்கு சவுக்கடி கொடுப்பதற்காக தான் நான் வந்திருக்கிறேன்.
வருங்கால முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான். இவங்களுக்கு முடிஞ்சது கதை இன்னும் 15 நாட்களில் ஆட்சி கலங்கவும் என்று அதிமுகவினரை குறிப்பிட்டார் அதனை தொடர்ந்து பேசிய அவர் போர்படை தளபதி சிங்கம். இந்த உக்காந்திருக்கு சீறிவரும் சிங்கம், அடிமைப்பெண் எம்ஜிஆர் அவர்கள் சிங்கம் அதுக்கப்புறம் இங்க உட்கார்ந்து இருக்க அண்ணாமலை அவர்கள் தான் சிங்கம்.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பேங்கில் போடுகிறேன் என்று சொன்னிங்களே போட்டிங்களா அவன் ஒருத்தன் அவன் நயன்தாராக்கு மட்டும் தான் ஜோடியாக நடிப்பான் இந்த ஒக்காந்து இருக்கு பாருங்க கருப்பு தங்கம் 35 வயசு 30 வயசு அண்ணாமலை ஐபிஎஸ் இவர் தான் அடுத்த முதல்வர் இவ்வாறு நடிகை வாசுகி பேசியுள்ளார்.
திமுக கட்சியினரையும் மற்றும் நயன்தாரா கூட ஜோடியா தான் நடிப்பாரா என்று உதயநிதியை கலாய்த்த நடிகை மீது கடும் கோபத்தில் உள்ளார்கள் திமுகவினர்.
பொதுக்கூட்டங்களில் எதிர்க்கட்சியை தாக்கி பேசுவது வழக்கம் தான் ஆனால் அதில் ஒரு எல்லை இல்லாமல் கொஞ்சம் ஓவராக தான் பேசியுள்ளார் நடிகை. திமுக அதிமுக என்ற இரு மாபெரும் கட்சிகளை தவறாக பேசியதற்கு நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.