அண்ணாமலை ஐபிஎஸ் தமிழகத்தைச் சார்ந்த இவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். சிறப்பாக பணியாற்றி வந்த அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு மோடி அவர்களை மிகவும் பிடிக்கும். தற்பொழுது அவரது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்து கிராமப்புறங்களில் மக்கள் சுயசார்பு பணிகளை மேற்கொள்ள உதவும் பணிகளில் ஈடுபடப் போவதாக கூறியவர். தற்பொழுது அரசியல் கட்சி ஒன்றில் சேர உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
முதலில் ரஜினிக்கு ஆதரவாக பேசியதால் ரஜினியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறது என்று செய்திகள் வந்தது. அதன்பின் ஒரு பேட்டியில் நான் ரஜினியின் நடிப்புக்கு ரசிகன். ரஜினியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
தற்பொழுது நமக்குக் கிடைத்துள்ள செய்திப்படி திரு.அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.. நட்டா அவர்களை சந்தித்து பாஜக கட்சியில் இணைய உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.