Sunday, April 28, 2024
-- Advertisement--

சாய்பாபா தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது உயிர் இழந்த அனிதா சம்பத் தந்தை. அப்பா கூட கடைசி வரை பேசமுடியாமல் போச்சி அனிதா உருக்கம்.

அனிதா சம்பத் தமிழ் ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர். இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். பிக்பாஸில் சிறப்பாக விளையாடி வந்த அனிதா சமீபத்தில்தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா கடந்த வார இறுதியில் பத்தாவது போட்டியாளராக வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் இந்த புத்தாண்டை என் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்று கூறியவர் மேலும் இதுவரை நான் ஹனிமூன் செல்லவில்லை இனிதான் செல்ல திட்டமிட்டு உள்ளேன் என்று கூறியிருந்தார். சக போட்டியாளர்கள் அனைவரும் அனிதாவை வாழ்த்தி அனுப்பினார்கள்.

அனிதா வீட்டில் திடீரென்ற எதிர்பாராத மரணம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அனிதா சம்பத்தின் அன்புத் தந்தை பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளரான ஆர்சி சம்பத் மரணம் அடைந்துள்ளார்.

சீரடி சாய் பாபாவை தரிசனம் செய்வதற்காக அவரது மகனுடன் சீரடி சென்றுள்ளார் அனிதாவின் தந்தை சாய்பாபா தரிசனம் முடித்து விட்டு சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மரணமடைந்துள்ளார் அவரது உடல் பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து ஆம்புலன்சில் சென்னை கொண்டு வரப்படுகிறது. எதிர்பாராதவிதமாக அனிதாவின் தந்தை மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து அனிதா தற்பொழுது இன்ஸ்டாவில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதில் என் அப்பாவை கடைசி வரை என்னால் பார்க்க முடியவில்லை பல தடவை அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டேன் ஆனால் சிக்னல் கிடைக்காததால் அவரிடம் பேச முடியவில்லை. இன்று காலை 8 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்ட உடனே பெரும் அதிர்ச்சி அடைந்தேன். சீரடியில் இருந்து சென்னை வந்து கொண்டிருக்கும் போது மரணமடைந்துள்ளார் எனது தந்தை .

நாளை சென்னை வர வேண்டியவர் இன்று மரணித்துள்ளார். என்னால் இதை நம்ப முடியவில்லை நீ வீட்டுக்கு நடந்து வரவேண்டும் உன்கிட்ட நெறைய பேசனும் உன்னுடைய குரல் கேட்டு 100 நாள் ஆச்சு தெரிந்திருந்தால் முன்பாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டு உன் கூட கொஞ்ச நாளில் இருந்து இருப்பேன்.

விஜய் டிவி நிகழ்ச்சி திரும்ப வரும் ஆனால் அப்பா திரும்ப வர மாட்டாங்க இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இருந்திருந்தால் என் அப்பாவின் மரணத்திற்கு கூட வர முடியாமல் போயிருக்கும். வாழ்க்கை எப்போதும் கணிக்க முடியாத ஒன்று எல்லாமே ஒரு காரணத்துக்காக தான் நடக்கிறது அனைவரும் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளுங்கள் நான் எனது தந்தையே மிஸ் செய்கிறேன் கூற்றம் ஆசையாக இருக்கிறது என்று அனிதா சம்பத் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles