நடிகை ஆண்ட்ரியா கவுதம் வாசுதேவ் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார். முதல் படத்தில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் ஆண்ட்ரியா குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்த ஆண்ட்ரியா ஒரு கமர்சியல் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அவர் நடித்த தரமணி இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான வடசென்னை படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. வடசென்னையில் ஆடை அணியாமல் ஒரு காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார் ஆண்ட்ரியா. அதுபோல அவள் என்ற படத்தில் சித்தார்த்துடன் அவர் செய்த ரொமான்டிக் லூட்டிகள் படம் பார்ப்பவர்கள் நெளியும் படி இருந்தது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியா தமிழில் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்றால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் தான் அடையாளம் கிடைக்கப்படுகிறது.
நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி விஜய் அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டது ஆனால் என்னுடைய வளர்ச்சிக்கு நல்ல கதைகள் கொண்ட படம் மட்டுமே தேவைப்பட்டது. நல்ல கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். கதைக்கு தேவை என்றால் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கிறேன் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.