Monday, May 13, 2024
-- Advertisement--

ஆந்திராவில் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க உத்தரவு போட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!!!

ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறார். ஆந்திர முதல்வரை தமிழ்நாட்டு ஊடகங்கள் புகழ்ந்து வருவதற்கு காரணம் அது ஒன்றே.

ஆந்திர மாநிலம் அமராவதியில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார் அப்பொழுது அந்தக் கூட்டத்தில் அவர் அரசு நகராட்சி, மாநகராட்சி, குருகுலப் பள்ளியில் ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும் என்று புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த திட்டம் மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி அதாவது இன்று தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஜூலை 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வந்துவிடும் ஒரு மாணவிக்கு மாதம் 10 வீதம் ஆண்டுக்கு 120 நாப்கின்கள் வழங்கப்படும் இதற்காக அரசு 4 1.4 கோடி செலவிடும் இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles