அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இவர் நேற்று காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது நெஞ்சு வலி வந்து அருகில் இருந்த தர்மபுரி மாவட்டம் காரியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று வெளியான தகவலின் படி அன்பில் மகேஷ் பொய் மொழி அவர்களுக்கு ஆன்ஜியோக்ராபி Surgery செய்துள்ளார்கள் ரத்த நாளத்தில் மூன்று அடைப்புகள் இருந்தது என்ற செய்திகள் எல்லாம் இணையத்தில் வெளியானது ஆனால் இன்று மருத்துவமனை அறிக்கையில் அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
அன்பில் மகேஷ் அவர்கள் அப்பிடாமினன் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதாவது வயிற்றுக்கு மேல் பகுதியில் வலி ஏற்பட்டதன் காரணத்தினால் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் தற்பொழுது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்வதாகவும் அறிவித்திருந்தார்கள்.
இன்று காலையிலே பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கேட்டறிந்தார்.
தற்பொழுது அன்பில் மகேஷ் அவர்கள் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் நேற்று வந்த செய்தி உண்மையா அல்லது உண்மையிலேயே வயிற்று வலிக்காகவா பெங்களூர் வரை சென்று சிகிச்சை பெற்றார் என்று மக்களிடம் குழப்பமும் மர்மமாகவே உள்ளது.
எது எப்படியோ நல்ல மனிதர் நன்றாக இருந்தாலே போதும் என்கிறார்கள் இணையவாசிகள்.