இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இன்று முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதில் இந்தியா அமெரிக்கா இடையே அமெரிக்கன் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று முதல் 31ஆம் தேதி வரை 18 விமானங்களை இயக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விமானங்கள் டெல்லி-நியூயார்க் இடையே தினமும் ஒரு விமானம் விதமும், டெல்லி- சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று விமானங்களும் இயக்கப்பட உள்ளன.
இந்த விமான சேவை ஏர் பிரான்ஸ் நிறுவனம் டெல்லி , மும்பை, பெங்களூரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை 28 விமானங்களை இயக்க உள்ளன. மேலும் ஜெர்மனி பிரிட்டன் நாடுகளுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து உடன்படிக்கையை மீறி நியாயமற்ற வகையில் செயற்படுவதாக ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா இந்தியாவிற்கு இடையேயான புதிய ஒப்பந்தத்தின் படி இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன.