அமலாபால் முதல் படமே சர்ச்சையான படத்தில் நடித்து பெரிய சர்ச்சையில் மாட்டிக் கொண்ட நடிகை. மாமனார் மருமகள் உறவைக் கொச்சைப்படுத்திய கதையில் நடித்ததால் அமலாபாலுக்கு பெரிய எதிர்ப்பு வந்தது. முதல் படமான சிந்து சமவெளி படத்தில் ஏன் நடித்தோம் என்று வருந்தும் அளவிற்கு அமலாபால் இருந்தால் அதனைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா என்ற படத்தில் நடித்தார் அமலாபால்.
அந்தப் படத்தில் மைனா என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்ததால் அனைவராலும் கவனிக்கப்பட்டு நிறைய படவாய்ப்புகளை கைப்பற்றினார். அதன் பின் இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஒரு சில காரணங்களால் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
அதன்பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அமலாபால் கோவில்கள் சுற்றி வந்தார். சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்கத் தொடங்கினார் அமலா. மீண்டும் தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நல்ல கதையும் கிளாமரும் இருந்தால் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்று நினைத்தாரோ என்னமோ ஆடை என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து இருந்தார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்த அமலா பாலுக்கு முன்னிருந்த மார்க்கெட் இல்லாததால் பாண்டிச்சேரியில் தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்தார். தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் போட்டிங் செல்வது நண்பர்களுடன் டான்ஸ் ஆடுவது என்று பொழுதைக் கழித்து வரும் அமலாபால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
என்னாச்சி அமலாபாலுக்கு ஏன் இப்படியெல்லாம் புகைப்படம் பதிவிடுகிறார்கள் என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.