அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்தத் திரைப்படத்தின் மூலம் பல விருதுகளைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அமலாபால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். பின்பு இயக்குனர் A.L விஜயனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரிடமும் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்தும் பெற்றுள்ளார்.
அமலாபால் தமிழில் இறுதியாக நடித்து வெளிவந்த ஆடை திரைப்படம் மக்களிடையே மிகுந்த விமர்சனத்தைப் பெற்றது. அமலாபால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். மேலும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அமலாபால் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் விமர்சனத்தை பெற்று வருகிறார்.
இவர் சமீபத்தில் ஆன்மீகத்தில் தனது ஈடுபாட்டை செலுத்துவதாகவும் ஆன்மிக உணர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளார் எனது அகந்தை மறைந்துவிட்டது எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு எடுத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தியானம் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் உள்மனதை பற்றி கற்றுக்கொள்ள எனது 19வது வயதில் முதல் முதலான ஈஷா யோகா மையத்திற்கு சென்று வந்தேன்.
அப்பொழுது சத்குருவிடம் மூன்று கேள்விகள் கேட்டேன். அதற்கான விடையை யோகா பயிற்சி மேற்கொள்ளும்போது தருவதாக சத்குரு கூறினார். அது எனக்கு அப்போது புரியவில்லை. அதை ஏற்றிருந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வந்திருக்கும்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரை சந்தித்த பிறகு எனது வாழ்க்கை முழு வட்டத்திற்குள் வந்து விட்டது. எது ஆன்மிகத்தின் சிறப்பான தொடக்கம் என்று கூறியுள்ளார். ஆன்மீகத்தில் மாறி இருப்பதற்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.