நடிகை அமலாபால் முதல் படமே பெரிய சர்ச்சைக்குரிய படமாக அமைந்தது. சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்த அமலா பால் ஏகப்பட்ட எதிர்ப்பையும் கண்டனங்களையும் சந்தித்தார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட அமலாபால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அவருடைய இரண்டாவது படமான மைனா என்ற படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டது அந்தப் படம் கொடுத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு சரியான கதைகளை தேர்ந்தெடுத்து அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அமலாபால். திருமணமான சில மாதங்களிலேயே விஜய்க்கும் அமலாபாலுக்கும் சில வாக்கு வாதங்கள் நடந்து வந்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் அமலாபாலை விஜயின் குடும்பத்தினர் கண்டித்தும் வந்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது அது மட்டுமல்லாமல் இரவு நேர பார்ட்டிக்கு செல்வது என்று அமலாபால் எப்பவும் போலவே இருந்திருக்கிறார் அது விஜய்யின் குடும்பத்திற்கும் விஜய்க்கும் பிடிக்கவில்லை அதுமட்டுமில்லாமல் அரசல்புரசலாக இரவு நேர பார்ட்டியில் அமலா பால் செய்த வேலைகள் எல்லாம் விஜயின் குடும்பத்தினர் காதுக்கு செல்ல அதன்பின் விஜய் அமலாபாலை விவாகரத்து செய்தார் என்று செய்திகள் சில சினி நபர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
அதற்குப் பின்னும் தமிழ் மலையாள படங்களில் நடித்து வந்த அமலா பால் சில நாட்கள் ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தி வந்தார். தற்பொழுது நடிகை அமலாபால் தெலுங்குவில் வெப் சரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் குடி யடமைத்தே என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் வருகின்ற வெள்ளிக்கிழமை OTT தளத்தில் வெளியாக உள்ளது இந்த சீரிஸில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமலாபால். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்த அமலா பால் கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.