Friday, May 17, 2024
-- Advertisement--

IPS அதிகாரி ஆகும் ஆல்யா மானசா..!!! காக்கி சட்டையில் அசத்தும் ஆல்யா. புகைப்படங்கள் இதோ.

ஆல்யா மானசா சின்னத்திரைக்கு மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார் அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் என்பவர் நடித்திருந்தார்.

மானஸ் என்பவரை காதலித்த ஆல்யா சில பிரச்சனைகளை அவரை விட்டு பிரிந்து வந்து ராஜா ராணி சீரியலில் நடித்து வந்தார். செம்பா என்ற கதாபாத்திரத்தில் ராஜா ராணியில் நடித்து தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்த ஆல்யா அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரகசியமாக திருமணம் செய்து கொண்ட ஆளியா மற்றும் சஞ்சீவ் தனக்குத் திருமணமான விஷயத்தையே கொஞ்சம் லேட்டாக தான் அறிவித்தார்கள். திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத ஆல்யாவின் தாயாரை சமாதானப்படுத்தி வளைகாப்புக்கு அழைத்து வந்தார் சஞ்சீவ்.ஆல்யாவிற்கு தற்பொழுது ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.

ராஜா ராணி முடிவடைந்த நிலையில் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் மறுபடியும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஆனால் இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடிக்கவில்லை அவருக்கு பதில் சரவணன் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த சீரியலில் ஆல்யா மானசா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஐபிஎஸ் ஆக நடிக்கிறார். ஆல்யா மானசா காக்கி சட்டை போட்டுக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இனிவரும் எபிசோடுகளில் ஆலியா மானசாவை சந்தியா ஐபிஎஸ் ஆக ரசிகர்கள் பார்க்கலாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles