Thursday, May 2, 2024
-- Advertisement--

குட்டி ஆலியாவின் சிரிப்பு சத்தத்துடன் நடந்த சுவாரசியமான போட்டோஷூட்..!!! கொள்ளை அழகு.

ஆலியா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பின் டிவி சேனல்கள் நடத்தும் நடனப் போட்டியில் கலந்து கொண்டு தனது காதலன் மான்ஸுடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் பிரியர்களை கவர்ந்தார்.

ஆலியாவும் அவரது காதலரும் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர். அதன்பின் ராஜா ராணியின் கிடைத்த பிரபலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆலியா விளம்பரப் படங்களில் அதிகமாக நடித்து நன்றாக சம்பாதிக்க தொடங்கினார். அதன்பின் ஆலியாவிற்கும் ராஜா ராணி சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவருக்கும் காதல் என்று தகவல்கள் வெளியில் கசிந்தது.

ஆலியா சஞ்சீவ் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிக்கு செல்வது மற்றும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் வெளிநாட்டில் சுற்றி வந்தார்கள். சில வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் காதலிக்கும் செய்தியை இவர்களே ஒப்புக் கொண்டதுடன் திடீரென்று இருவரும் யாருக்கும் அறிவிக்காமல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதல் திருமணத்திற்கு ஆலியாவின் அம்மா வரவில்லை .

ஆலியாவின் வருத்தத்தைப் போக்க வளைகாப்பு அன்று ஆலியாவின் அம்மாவை சமாதானம் செய்து வர வைத்தார் சஞ்சீவ். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது அம்மாவை பார்த்த ஆலியா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

சில மாதங்களுக்கு முன் ஆலியாவிற்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தனது குழந்தையை அழகாக போட்டோ ஷூட் செய்து அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார் ஆலியா. இதோ அந்த புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles