ஆலியா மானசா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் ராஜா ராணி என்ற தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. செம்பா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் ஆலியா அவரை வைத்து வருடக்கணக்காக ராஜா-ராணி சீரியலை ஓட்டி வந்தார்கள்.
ஆலியா மானசா முதலில் தன் நெருங்கிய நண்பரான மானஸ் என்பவரை காதலித்து வந்தார் அதன்பின் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். சில வருடங்கள் கழித்து ராஜா ராணியில் தன்னுடன் ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ் என்பவரை காதலித்தார் ஆலியா.
இருவரும் ஒன்றாக வெளிநாடுகள் பறந்து சுற்றி திரிந்தனர். திடீரென்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தங்களது திருமணத்தை ரகசியமாக செய்துகொண்டனர் அதற்கு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தி முக்கியமான பிரபலங்களை மட்டும் அழைத்தனர்.
தற்பொழுது ஆர்யாவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது அந்த குழந்தையின் பெயர் ஐலா. செம க்யூட்டான அந்த குழந்தையின் முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார் ஆலியா மானசா.
தற்பொழுது தனது அழகு குழந்தையின் முதல் பிறந்தநாள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார் அதில் ஆலியா சிறு குழந்தை போல விரலை சப்பிக்கொண்டு தன் குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இருந்தது இதனை பார்த்த ரசிகர்கள் ஆலியாவின் சுட்டி தனம் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.