Sunday, May 19, 2024
-- Advertisement--

புனித் ராஜ்குமார் அவர்களின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய அல்லு அர்ஜுன்…!!! புனித்தை நினைத்து வருந்தும் குடும்பத்தினர்..!!!

புனித் ராஜ்குமார் கன்னட சூப்பர் ஸ்டார் 29 அக்டோபர் 2021 அன்று உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பு வந்துள்ளது உடனே மருத்துவமனையில் அனுமதித்து சோதித்துப் பார்த்தபின் தான் அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தது புனித் ராஜ்குமார் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்று.

ஒரு நடிகர் மீது ரசிகர்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பார்களா என்று அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் கர்நாடகா முழுவதும் அப்பு அப்பு என்ற குரல் ஒலித்துக்கண்டே இருந்தது. கண்ணீருடன் மக்கள் மருத்துவமனை வாசலில் முன் திரள ஆரம்பித்தனர்.

புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் மருத்துவமனையை விட்டு அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது கூட அவருடைய ஆம்புலன்சை பின் தொடர்ந்து கொண்டே ரசிகர்கள் அழுது கொண்டே சென்ற காட்சிகள் இன்னும் கண் முன் நிற்கிறது.

அந்த அளவிற்கு மனிதன் ஒரு நடிகனாக மட்டும் அல்லாமல் ஒரு நல்ல மனிதனாய் வாழ்ந்து விட்டு இந்த உலகை விட்டு சென்று விட்டார். புனித் ராஜ்குமார் செய்த நிறைய உதவிகள் அவர் இறந்த பின் தான் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது அந்த அளவிற்கு சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வந்துள்ளார் புனித்.

படத்தில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் மக்கள் மனதிலும் ஹீரோவாக வாழ்ந்துள்ளார் இன்றும் அவர் சமாதியில் மக்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் அவர்கள் இன்று புனித் அவர்களில் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய அல்லு அர்ஜுன் நேரடியாக புனித் ராஜ்குமார் அவர்களின் வீட்டிற்கு சென்று அவருடைய படத்தை பார்த்து கும்பிட்டு அவருடைய அண்ணன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி திரும்பியிருக்கிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles