ஆலியா மானசா தமிழ் சின்னத்திரையில் நடித்து மக்களின் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் . இவர் “ராஜாராணி” என்ற சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சஞ்சீவ் மற்றும் ஆலியாவின் திருமணத்திற்கு ஆலியாவின் பெற்றோர்கள் வராததால் சற்று மனக்கஷ்டத்தில் இருந்தார் ஆலியா. அவருடன் பேசாமல் நேரில் பார்க்காமல் இருந்த அவரது பெற்றோர்கள் அலியாவின் சீமந்தத்திற்கு வந்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்கள். பெற்றோரை கண்ட உடன் சந்தோஷத்தில் கண்ணீர் விட்டார் ஆலியா அதன் பின் சில மாதங்களில் ஆலியாவிற்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
ஆலியா தனது குழந்தையை கொஞ்சும் கியூட் புகைப்படம் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் டிஸ்ட்ரி சுற்றி போடுங்க குழந்தைக்கு என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.