ஐஸ்வர்யாராய் இன்றுவரை இவருக்கு கிடைக்கும் வரவேற்பு ரசிகர்களிடம் வேறு எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்கவில்லை என்று உறுதியாக சொல்லலாம். ஒரு நேரத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.
முதல் படத்திலேயே அவருக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தது. அதன்பின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஏகப்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா ராய்.
தமிழைவிட ஹிந்தி ரசிகர்கள் ஐஸ்வர்யாராயை தூக்கி வைத்துக் கொண்டாடி வந்தார்கள். ஹிந்தியில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் பெரிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற ஐஸ்வர்யா சில காதல் தோல்விகளை சந்தித்து அதன்பின் அமிதாப் பச்சன் அவர்களின் மகன் அபிஷேக் பச்சன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது தனது அன்புக் குழந்தையை வளர்ப்பதிலும் குடும்பத்தை கவனித்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்திலும் ஐஸ்வர்யாராயை எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வைத்துவிட வேண்டுமென்று முயற்சி செய்தார். பாபா படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க வைக்க முயற்சி செய்தார் ரஜினி ஆனால் ஒரு சில காரணங்களால் அது தள்ளிப்போக படையப்பா படத்திலும் ஐஸ்வர்யாவுக்கு பரிந்துரை செய்தாராம் ரஜினி. அதன்பின் சந்திரமுகி படத்தில் கூட ஐஸ்வர்யாராய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி ஐஸ்வர்யாராய் நடிக்க வைக்கும் முயற்சி செய்தார்களாம் அப்பொழுதும் ஒரு சில கமிட்மெண்ட் அவரால் நடிக்க முடியவில்லையாம். இயக்குனர் ஷங்கரின் எந்திரன் படத்தில் ஒரு வழியாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைத்ததாகவும் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா ராயின் சமீபகால புகைப்படங்கள் பார்த்து வியந்து போன ரசிகர்கள் இவங்களுக்கு வயது 47 என்று சொன்னால் நம்பவா முடிகிறது என்று கமெண்ட் செய்தும் வருகிறார்கள். அந்த அளவிற்கு உலக அழகி இன்றும் அழகு குறையாமல் இருக்கிறார்.